Wednesday 8 February 2012

ஏழு விஷயங்கள்


பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்கள்

நபி
(ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு செயல்களைச் செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடைவிதித்தார்கள்.

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.

2. ஜனாஸாவை(மரணித்தவரின் உடலை)ப் பின்தொடர்ந்து செல்வது.

3. தும்மியவர்அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால் அவருக்காகயர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று மறுமொழி கூறுவது.

4. நலிந்தவருக்கு உதவுவது.

5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது
 
6. (மக்களிடையே) சலாமை(அமைதியை)ப் பரப்புவது.

7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது


(ஆண்களாகிய) எங்களுக்கு அவர்கள் தடை செய்த ஏழு விஷயங்கள் இவைதாம்:

1. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது.

2. (ஆண்கள்) தங்கமோதிரம் அணிவது.

3. மென்பட்டுத் திண்டில் அமர்வது.

4. சாதாரணப் பட்டு அணிவது.

5. அலங்காரப் பட்டு அணிவது.

6. எகிப்திய பட்டு அணிவது.

7. தடித்த பட்டு அணிவது


ஆதாரம் : புகாரி

No comments:

Post a Comment